ஜித்தா தமிழ்சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி 0

அதிரை பிரஸ் | 22:49 |

ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்வு சீசன்- 2, வியாழன் இரவு (02.02.2012) இந்திய தூதரக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தூதரக அதிகாரி(Consul General) மேதகு ஃபயஸ் அஹமது கித்வய் அவர்களும் இன்னும் பல தூதரக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக குழ்ந்தைகளுக்கான நடனப் போட்டி,மாறுவேடப் போட்டி, மற்றும் வினாடிவினா போட்டி ஆகியவை நடத்தப் பட்டது.
(மாறுவேடப் போட்டியில் அதிரை சிறுவன் தாரிக் அஹமது (ஜவஹர்லால் நேரு வேடமிட்டு வந்தபோது எடுத்தப் படம்)


 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களும் வழங்கப் பட்டன.மேலும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கி கவுரவிக்கப் பட்டது.

(வினாடி வினா போட்டியில் இறுதி சுற்றுவரை முன்னேறிய அதிரை சார்ந்த மாணவன் ஆதில் ரஃபியா வுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியபோது எடுத்த படம்)

நிகழ்ச்சியை ரஃபியா அஹமது தொகுத்து வழங்கினார் இவருக்கு மாணவர்கள் சிலரும் உறுதுணையாக நிகழ்ச்சி தொகுப்பில் பங்கேற்றனர்.

நிகழ்சியை காண ஜித்தாவை சார்ந்த தமிழர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை ஜித்தா தமிழ்சங்கம் சிறப்பாக ஏற்படு செய்திருந்தது.

0 Responses So Far: