அதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் ! 0

அதிரை பிரஸ் | 10:45 |




அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்”  ( WCC ) சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாளான நேற்று  ( 22-03-2012 ) வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது.



இத்தொடர் போட்டியில் அதிரையைச் சார்ந்த WCC , AFCC, KCC, SYDNEY, RCCC,  ABCC,  ASC, போன்ற உள்ளூர் அணிகளும், மேலும்  XXX மிலாரிக்காடு, வேதாரண்யம், நெய்வேலி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, புதுப்பட்டினம், கறம்பக்குடி, முல்லாங்குறிச்சி, தம்பிக்கோட்டை, மறவக்காடு, மன்னாங்காடு, வடகாடு, எட்டாம்புலிகாடு போன்ற வெளியூர் அணிகளும் பங்கு பெற்று சிறப்பாக தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.




போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளின் விவரங்கள் :
1.       முதல் பரிசு : பாப்பாநாடு அணியினர்
2.       இரண்டாம் பரிசு : அதிரை  WCC அணியினர்
3.       மூன்றாம் பரிசு : அதிரை AFFC அணியினர்
4.       நான்காம் பரிசு : மதுக்கூர் அணியினர்




மேலும் போட்டிகளில் விளையாடி தங்களின் தனித்திறமைகளை வெளிபடுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழா நிகழ்ச்சிகளை அதிரை  WCC அணியின் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துருந்தனர்.


 


Source : TIYA

0 Responses So Far: